தமிழகத்தில் இன்று
பாட்னா:
நம் ஊர்களில் கொள்ளையர்கள் வீட்டுக்குள் வந்து விட்டால் குழந்தைகள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதும், அழுவதும்தான் வழக்கம். ஆனால்எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் முகமூடிக் கொள்ளையர்களிடம் சிக்கித் தவித்த தனது தாயைக் காப்பாற்றியது 6 வயதான சிறுமி.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பாட்னாவிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காகெளவுல் பகுதியில் வசித்து வருபவர் நீனா. இவரது மகள் சுவாதி சர்மா.
சம்பவத்தன்று அடையாளம் தெரியாத கொள்ளைக் கும்பல் ஒன்று இவர்கள் வீட்டுக்குள் புகுந்தது. அடுத்த வினாடி நீனாவையும், அவரது மகயுைைம்மிரட்டி வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் உடனடியாய் எடுத்துக்கொடுக்குமாறு கேட்டது. இல்லாவிட்டால் கூரிய ஆயுதங்களால் கொலைசெய்து விடுவேன் என்று மிரட்டியது.
ஆனால் அங்கே விளையாடிக்கொண்டிருந்த ஸ்வாதியோ வீட்டிலிருந்த அலார மணியை அடித்த ஓசையெழுப்பி அக்கம்பக்கத்தினரை அழைத்தது.
இதுகுறித்து ஸ்வாதி கூறுகையில்,
நான் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது 4 பேர் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அப்போது எங்கள் வீட்டுக் கதவு திறந்தேயிருந்தது. நுழைந்தவேகத்தில் அவர்கள் என் அம்மாவை கட்டிப்போட்டு அடித்து உதைக்க ஆரம்பித்தனர். கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்கள். அவர்கள்கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள்.
அப்போது நான் கதவிடுக்கில் ஒளிந்து கொண்டு வீட்டிலிருந்த அலாரத்தை அடித்து ஓசையெழுப்பினேன் என்று கூறியது. இதையடுத்து பக்கத்து வீட்டிலிருந்த 2பேர் அங்கேயிருந்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டனர். பலர் அவர்கள் வீட்டுமுன் கூடினர்.
அப்போது தப்பிக்கமுயன்ற 4 பேரில் இரண்டு பேர் பிடிபட்டனர். மேலும் இரண்டு பேர் 70 ஆயிரம் பெறுமானமுள்ள தங்க, வெள்ளிச்சாமான்களுடன்தப்பித்து விட்டனர்.
இதுகுறித்து ஸ்வாதியின் அம்மா நீனா கூறுகையில், என் மகளால்தான் எனக்கு மறுவாழ்க்கையே கிடைத்தது என்று நெகிழ்ச்சியாய்க் கூறினார். ஸ்வாதிகூறுகையில், நான் பிற்காலத்தில் மிகச்சிறந்த போலீஸ் அதிகாரியாக வர விரும்புகிறேன் என்று கூறியது.
ஐ.ஏ.என்.எஸ்.