தமிழகத்தில் இன்று
டெல்லி:
பாகிஸ்தான் ஜெயிலில் 50 இந்திய ராணுவ வீரர்கள் போர்க்கைதிகளாக உள்ளனர் என்று ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறினார்.
பாராளுமன்ற மேல்சபையில் அவர் இதுகுறித்துக் கூறுகையில், பாகிஸ்தான் சிறையில் இந்தியப் போர்க் கைதிகள் யாரும் இல்லை என்று கூறியது. பின்னர்அவர்கள் இதுகுறித்து மறுஆய்வு நடத்துகிறோம் என்றும் கூறினார்கள்.
காஷ்மீர் சண்டையினால் பெரும்பாலான இந்திய ராணுவ வீரர்கள் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தான் சிறையில் 50 போர்க்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிக்குரிய விஷயமாகும்.பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியப் போர்க்கைதிகளை மீட்க இந்தியா அனைத்து விதமான முயற்சிகளையும் செய்யும்.
இது தவிர தோடா மாவட்டத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை விரட்டவும் இந்திய ராணுவத்தினர் அதிக முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications