தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்திய மக்கள்தொகை நாளை (வியாழக்கிழமை) 100 கோடியை எட்டுகிறது என்று புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இன்று நள்ளிரவு(புதன்கிழமை)12.56க்கும் பிறக்கும் குழந்தையுடன் சேர்த்து இந்திய மக்கள் தொகை 100 கோடியை எட்டுகிறது.
புள்ளியல் வல்லுநர்கள் நடத்திய கணக்கெடுப்பு விபரத்தில் இது தெரியவந்துள்ளது.
அதிகரித்து வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் வகையிலும், குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வது குறித்த அவசியத்தை பரப்பும் வகையிலும்விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தவாரம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. கபில்சிபல் இதுகுறித்துக் கூறுகையில், இந்திய மக்கள்தொகை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இது மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகையில் பெரும்பான்மையானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழே உள்ளனர்.அவர்களுக்கென்று நலத்திட்டங்களை அறிமுகப்படுத்த அரசு முன்வரவேண்டும் எனறார்.
பாப்புலேஷன் கவுன்சில் திட்ட இயக்குநர் அஞ்சலி நாயர், இதுகுறித்துக் கூறுகையில் ஐந்தாண்டுத் திட்டத்தின் முழுமுதல் குறிக்கோளே தாய்-சேயின் நலன்தான்.அதிகக் குழந்தைகள் பெற்ற ஒரு தாயின் நலன் இயற்கையாகவே பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்குஅனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதால் நாட்டில் மக்கள்தொகை குறைவதுடன் நாட்டில் வேலையில்லாப்பிரச்சனையும் தீரும்.
இந்தியாவுடன் ஒப்பீடு செய்கையில் சீனா மக்கள்தொகை கட்டுப்பாட்டில் அதிக அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியா குடும்பத்திற்கு ஒரு குழந்தைத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.
யு.என்.ஐ.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்












Click it and Unblock the Notifications