தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சேலத்தில் கார்-லாரி மோதல்: 4 பேர் பலி
சேலம்:
சேலத்தில் லாரியும் காரும் மோதி 4 பேர் இறந்தனர். கேரளாவிலிருந்து சேலத்திற்கு ஒரு காரில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பாண்டிச்சேரியிலிருந்து கோழிக்கோட்டிற்கு பெயிண்ட் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இவை இரண்டுமே சேலம் சங்ககிரி அருகே உள்ளசீரகபாடி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் காரில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நான்கு பேரும் கேரள மாநிலம் காஞ்சாலி என்ற ஊரைச் சேர்ந்த கிஷோர்,வடகரை சுதீஸ், திருச்சூரை சேர்ந்த மானிஸ், டால் ஜோசப் என தெரிய வந்தது.
விபத்து நடந்த இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications