தமிழகத்தில் இன்று
டெல்லி:
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரும் அகதிகளை திருப்பி அனுப்புமாறு கடற்படைக்கும் கடலோர காவல்படையினருக்கும மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கடலோரக் காவல்படையின் மூத்த அதிகாரியொருவர் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவன நிருபரிடம்கூறுகையில்,
அகதிகளை இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறிஅவர்கள் நுழைந்தால் அவர்களை பத்திரமாக அழைத்து முகாம்களுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.
அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் நுழைந்துவிடாமல் தடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து கடந்த ஒருவராமாக இரவு பகலாக தீவிர கண்காணிப்பி ஈடுபட்டுள்ளோம்.
இப்போது 3 கப்பல்களும் விமானங்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இது தவிர கடற்படையின் கிழக்குப் பகுதி தலைமையகத்துடன் தெடார்ந்து தெடார்பு வைத்துக் கொண்டுள்ளோம்என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications