For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
தமிழகத்தில் புலிகள் யாரும் ஊடுருவவில்லை என்கிறது போலீஸ்

சென்னை

தமிழகத்துக்குள் விடுதலைப் புலிகள் யாரும் ஊடுருவவில்லை என தமிழக கியூ பிராஞ்ச் போலீசார்தெரிவித்துள்ளனர்.

மே 9ம் தேதி ராமேஸ்வரம் வந்திறங்கிய இலங்கை அகதிகளில் ஒரு பெண் விடுதலைப் புலியும் ஆண் விடுதலைப்புலியும் வந்ததாக செய்திகள் வெளியாயின.

ஆனால், இதை போலீசார் மறுத்தனர். அவர்கள் கூறுகையில், புலிகள் யாரும் வரவும் இல்லை, யாரிடமும்விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படவும் இல்லை. முன்னாள் விடுதலைப் புலிகள் கூட யாரும் வரவில்லை.

இலங்கையிலிருந்துவெளியேறி அகதிகளாக ராமேஸ்வரம் வருவோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.இதைத் தான் விடுதலைப் புலிகளிடம் விசாரணை நடத்துவதாக நினைத்துக் கொண்டு எழுதியுள்ளனர்.

புலிகள் யாரும் நுழைந்துவிடாமல் தடுக்க முழு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வேண்டுமென்றே இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது அப்பாவி அகதிகளைத் தான் பாதிக்கும். எனவே, இது போன்ற செய்திகளைபரப்ப வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X