தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் டாபாய் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள்உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் கண்காணித்து வரும் ராணுவவீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பதுங்கு குழிகளை நோக்கிச் சுட்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.
தொடர்ந்து ராணுவ வீரர்கள் அங்கே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கிச்சண்டை நடந்த இடங்களில் ஏகே.47 ரகதுப்பாக்கிகள், ஜெலாட்டின் குச்சிகள், வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவர்கள் வைத்திருந்த பத்திரிக்கைகள் பலவும்கைப்பற்றப்பட்டன.
தோடா மாவட்டத்திலும் இதே போல் தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications