தமிழகத்தில் இன்று
நியூயார்க்:
ஐ லவ் யூ வைரஸ் குறித்து விசாரணை நடத்தி வரும் பிலிப்பைன்ஸ் நாட்டு போலீசார் மூன்றாவது நபரை கைதுசெய்துள்ளனர். இவர் வைரசை பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட ரியோனல் ரமனாசின் மனைவி இரினாவின்தம்பியாவார்.
டி கஸ்மேன் என்ற இந்த வாலிபர், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கம்ப்யூட்டர்களில் எப்படிபாஸ்வேர்ட்களைத் திருடலாம், பிற வெப் சைட்களின் சர்வர்களுக்குள் எப்படி நுழையலாம் என்பது குறித்து தீசிஸ்தயாரித்து சமர்பித்துள்ள விவரம் இப்போது தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த தீசிஸ் சட்ட விரோதமானது என்று கூறி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து அவர்பாதியிலேயே பள்ளியை விட்டு விலகிவிட்டார்.
மணிலாவில் உள்ள மகாதியில் ஏ.எம்.ஏ. கம்ப்யூட்டர் கல்லூரியில் படித்தவர் இவர். இங்கு படித்தபோது இவர் தனதுதீசிசில் எழுதியதாவது:
""நாம் (பிலிப்பைன்ஸ் நாட்டவர்) இன்டர்நெட்டுக்காக பெரும் தொகையை செலவிடுகிறோம். இவ்வளவுசெலவழித்தும் கூட அங்கு வெறும் ஈ-மெயில்கள் தான் படிக்கிறோம். (பிலிப்பைன்சில் ஒரு மணி நேரம் பிரெளஸ்செய்ய 3 டாலர் வாங்கப்படுகிறது. ஆனால். அமெரிக்கா, ஐரோப்பாவில் பிளாட் ரேட் அல்லது சில நிறுவனங்களின்இலவச இன்டர்நெட் சேவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.).
எனது தீசிசில் கூறப்பட்டுள்ள புரோகிராம்களை பயன்படுத்தினால் பிறரது இன்டர்நெட் கணக்கில் நுழைந்துவிடமுடியும். பெரும் பணத்தை மிச்சப்படுத்தவும் முடியும்"" என்று தனது தீசிசில் அவர் கூறியுள்ளார்.
இந்த 4 பக்க தீசிஸ் நகலை கல்லூரி நிர்வாகம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. இந்த தீசிஸ் மீதுஅவரது ஆசிரியர் எழுதிய குறிப்பில், நாங்கள் திருடர்களை உருவாக்க முடியாது. பிறரது ஈ-மெயில் பாஸ்வேர்டைத்திருடும் உதவும் இந்த தீசிசை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அவர் படிப்பை விட்டு விலகிவிட்டார்.












Click it and Unblock the Notifications