மலைக்க வைக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மேட்ச் பிக்சிங் குறித்து சிபிஐ இரண்டாம் கட்ட விசாரணை நடத்தயிருப்பதாக பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

மேட்ச் பிக்சிங் கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய வீரர்களுக்குத் தொடர்பிருக்கிருதா? அவர்களது சொத்து மதிப்பின் அளவு என்ன ? என்று சிபிஐ விசாரணைநடத்தி வருகிறது. முதல்கட்ட விசாரணையில் சிபிஐயையே மலைக்க வைக்கும் அளவுக்கு அவர்களிடம் சொத்துக்கள் இருந்தன என்று தெரிய வந்துள்ளது.

அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் ரூ 10 கோடிக்கும் குறையாமல் சொத்து உள்ளது. ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுமானால்இந்தக் கிரிக்கெட் சூதாட்டத்தில் பங்கு இல்லாமல் இருக்கலாம் என்று பிரபல நாளிதழ் ஏசியன் ஏஜில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் ஒருவரின் சொத்து மதிப்பு ரூ 200 கோடியைத் தாண்டும். அதனால் அவருக்கும் இந்த மேட்ச் பிக்சிங்கில்தொடர்பு இருக்கலாம் என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவர் தன்னுடையபல்வேறு தொழில்களில் பணமுதலீடு செய்துள்ளார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேட்ச் பிக்சிங் குறித்துத் தகவல்கள் தெரிய ஆரம்பித்தவுடனே சிபிஐயினர் தங்களது வேட்டையைத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தற்போதைய கிரிக்கெட்வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரின் சொத்து விபரங்கள் குறித்தும் கணக்கெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஏசியன் ஏஜ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்திப்படி இந்த வழக்கு குறித்தும், இதற்குத் தொடர்புடைய இந்திய வீரர்கள் குறித்தும் விரைவில் விசாரணைநடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சுக்தேவ் சிங் கூறினார்.

சிபிஐ இதுகுறித்து ஏற்கனவே பல்வேறு கிரிக்கெட் வீரர்களிடம் மேட்ச் பிக்சிங் குறித்து விசாரணை நடத்தியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மீண்டும்விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக அப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 1998 ம் ஆண்டும் அதற்குப் பின் கடந்த ஆண்டு நடந்தகிரிக்கெட் போட்டிகளிலும் நடந்த கிரிக்கெட் சூதாட்டம் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறியதாக பத்திரிக்கைச் செய்தியில்கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தொலைக்காட்சி நிலைய அதிகாரிகள் , ஐஏஎஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+