தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஜம்மு அருகே பஸ் விபத்தில் 25 பேர் சாவு
ஜம்மு:
பஸ் தாறுமாறாய் ஓடி கால்வாய்க்குள் விழுந்ததில் 25 பேர் இறந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு ஜம்மு அருகே நெல்ஹோ பகுதியில் இவ்விபத்து நடந்தது.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், தோடாவிலிருந்து உதம்பூர் செல்லும் பகுதியில் 60 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த பஸ் டிரைவரின்கட்டுப்பாட்டையும் மீறி தாறுமாறாய் ஓடி அருகிலிருந்த கால்வாய்க்குள் விழுந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 5 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். காயமடைந்த35 பேரில் 10 பேரின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications