தமிழகத்தில் இன்று
துபாய்:
இந்தியாவுடன் தகவல்தொழில்நுட்பத்துறை (ஐ.டி) உள்பட பல்வேறு துறைகளில் கூடுதல் ஒத்துழைப்பைஏற்படுத்திக் கொள்ள ஐக்கிய அரபு நாடுகள் முன் வந்துள்ளது.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) சார்பில் தென் மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் கொண்ட சமீபத்தில்துபாய் சென்றது. அங்கு மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து குழுவின் தலைவர் குட்டி கூறுகையில், கம்ப்யூட்டர்துறையில் இந்தியா அடைந்துள்ளமுன்னேற்றத்தைக் கண்டு யு.ஏ.ஈ. வியந்து போயுள்ளது. சில ஆண்டுகளில் இந்தத் துறையில் இந்தியா முன்னணிநாடாகிவிடும்.
இந்திய நிறுவனம் ஒன்று விரைவில் ஷார்ஜாவில் இன்டர்நெட் (ஆன் லைன்) பல்கலைக்கழகத்தைத் துவக்கஉள்ளது. இத் திட்டத்தில் 200 மில்லியன் முதலீடு செய்யப்பட உள்ளது. நடுத்தர தொழில்துறையினருக்கு கல்விமற்றும் பயிற்சி அளிப்பதில் இந்தியாவின் உதவியை யு.ஏ.ஈ. நாடியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications