தமிழகத்தில் இன்று
குயேட்டா:
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ராணுவம், அரசு, தன்னார்வ அமைப்புகள் முயற்சித்தும் கூட இந்தப் பகுதியில் பஞ்சத்தை போக்க முடியவில்லை.இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
உணவு, தண்ணீர், ஆடு-மாடுகளுக்கான தீவனம் ஆகியவற்றை தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளைவிட்டுவெளியேறி வருகின்றனர். தீவனம் கிடைக்காமல் ஆடுகளும் மாடுகளும் சாலைகளிலேயே இறந்து கிடக்கின்றன.அவற்றின் உடல்கள் அழுகிய நாற்றம் அந்தப் பகுதியெல்லாம் வீசுகிறது.
பலுசிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் இதே நிலை தான் உள்ளது. இந்தப் பகுதியில் கடும் வெப்பமும்நிலவுகிறது. வெப்பநிலை 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இதனால் நிவாரணப் பணிகள்மேற்கொள்வது கூட மிகச் சிரமமாக உள்ளது.
குஷ்டர் மாவட்டத்தில் நீரும் உணவும் இல்லாமல் 90 சதவீத கால்நடைகள் இறந்துவிட்டன. மக்கள் சிலரும்இறந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்தப் பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு,அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
மொத்தமுள்ள 26 மாவட்டங்களில் 23 மாவட்டங்கள் கடும் வறட்சியில் சிக்கியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.