For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இலங்கையில் போர் குறித்த செய்திகள் வெளியிட ரேடியோ, டி.விகளுக்குத் தடை

கொழும்பு:

இலங்கையில் அனைத்து வானொலி, மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் போர் தொடர்பான செய்திகள், அது தொடர்பான விவாத நிகழ்ச்சிகள்எதுவும் இடம்பெறக்கூடாது என்று இலங்கை அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் உள்ள ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் நடக்கும் போர் குறித்து எந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பவோ, போர்குறித்து அலசவோ கூடாது என்றும் அந்த தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கிட்டத்தட்ட 6 ரேடியோ நிலையங்களும், 6 தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன. யாரும் இந்த விதிமுறையை மீறக் கூடாது என்றும்அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுதவிர பிபிசி தொலைக்காட்சியும் போர் நிகழ்ச்சிகள் குறித்து எந்த ஒளிபரப்பும் செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவு கூறுகிறது.

இலங்கை பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனும், பிபிசியும் இணைந்து நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து சில நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தநிகழ்ச்சிகளுக்கு தற்போது தடை எதுவும் விதிக்கப்படவில்லை.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X