தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அலியிடம் கொள்ளையடித்த அலி கைது
கோவை:
அலியிடம் கொள்ளையடித்த அலியைப் போலீசார் கைது செய்து நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
கோட்டை மேட்டில் வசித்து வருபவர் மதீனா. இவர் மற்ற அலிகளுடன் சேர்ந்து திருமண விழாக்களுக்கு சமையல் வேலை செய்து வந்தார். இவருடன்நெல்லையைச் சேர்ந்த தேன்மொழி(50) என்ற அலியும், செலின் தாமஸ் என்ற அலியும் தங்கியிருந்தனர்.
சம்பவத்தன்று மதீனா திருமணம் ஒன்றிற்கு சமையல் வேலைக்குச் சென்று விட்டார். அப்போது செலின் தாமசை ஏமாற்றி விட்டு தேன்மொழி சுமார்23 பவுன் தங்கநகை, 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தேன்மொழியை கைது செய்து பொருட்களை மீட்டனர்.












Click it and Unblock the Notifications