For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
கால்வாயில் பஸ் விழுந்து 40 பேர் சாவு

சண்டிகர்:

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளரோபார்-பாலாச்சுவார் கால்வாயில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில், பஸ்ஸில்பயணம் செய்த 40 பேர் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

பஞ்சாப் மாநில அரசுப் போக்குவரத்துக்குச் சொந்தமான அந்த பஸ், அமிர்த்சருக்குச்சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்ஸின் முன் பக்கச் சக்கரங்களில் ஒன்றுதிடீரென்று வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகில் இருந்த கால்வாயில்விழுந்து மூழ்கியது.

இறந்தவர்களில் 6 பெண்களும், 2 குழந்தைகளும் அடங்குவர். விபத்தில் காயமடைந்த5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு ரோபார் துணைப் போலீஸ் கமினஷனர் உள்ளிட்ட அரசு உயர்அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X