தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு -
உள்துறை அமைச்சர் அத்வானி

நாசிக் (மகாராஷ்டிரா):

இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குஇந்தியாவில் விதிக்கப்பட்ட தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதுஎன்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.

நாசிக்கில் மகாராஷ்டிர மாநில பாஜக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாசிக் வந்தஅவர் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, விடுதலைப் புலிகள்மீதான தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது என்ற தெரிவித்தார்.

இலங்கையில் வட பகுதியில் தனி ஈழம் கேட்டு இலங்கை ராணுவத்துடன் கடந்த 12ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் போராடி வருகின்றனர். இந்த போரினால் இதுவரைஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

இந் நிலையில், மனித வெடிகுண்டுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பலியானார்.இச் சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததைஅடுத்து, அந்த இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

இதற்கிடையே, இலங்கை ராணுவத்துடன் தொடர்ந்து சண்டையிட்டுயாழ்ப்பாணைத்தைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை மீண்டும் நீட்டித்தது.ஆனால், அப்போது எந்த காலவரையும் நிர்ணயித்து அறிவிக்கப்படவில்லை.இப்போது, அடுத்த இரு ஆண்டுகளுக்கு இத் தடை நீட்டிக்கப்படுகிறது என்றுஅத்வானி அறிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டைநடந்து வரும் வேளையில் தடை நீட்டிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+