செயலை விட அதன் பயனை நேசித்தால்!
என்பதும்
"LUNAR"என்பதும் ஒரே சொல்லில்-
நிலவைக் குறித்தே உருவானவை
அதிக நிலவொளியில் புத்தி சுவாதினம் அதிகரிக்கிறது
ஆணின் புத்தியை கலங்கடிப்பதனால் தான்
பெண்களைப் பூரண நிலவிற்கு ஒப்பிட்டார்கள்
வானம் விசாலமாயிருப்பது மட்டுமில்லாமல்
நாம் பார்க்கும் போதெல்லாம்-
நம்மையும் விசாலப்படுத்துகிறது-
நிலவை, விண்மீன்களை, மேகங்களைப்
பார்க்கும் போதெல்லாம் இந்த பூமியின் மீது
இல்லாத, நாமாகத் திணித்த கோடுகள்
நம்மைப் பார்த்து சிரிக்கின்றன.
பொதுவாக இருப்பவற்றின் மூலம்
நாம் தூது விடலாம் -
அன்பை-
அமைதியை-
நேசத்திற்கான தகவலை
நிலவின் முலம் நாம் தகவல் தரலாம்-
ஆனால் நிலவே ஒரு தகவல் தான்-
தேய்ந்தும், வளர்ந்தும் சுழற்சியையும்-
தன் இருத்தலின் வலிமையால் அமைதியையும்-
அமைதியான இரவின் பின்னனியில்
செலுத்தும் கிரணங்களால் மென்மையையும்
படர விடுவதால் தான்
புத்திசுவாதீனங்கள் மட்டுமல்ல
மலரினங்களும் பூரண நிலவில்
மலர்ந்திருக்கின்றன.
புத்திசாலிகள் மெய்ஞானத்தையும்,
சிலர் புத்திசுவாதீனத்தையும்
அடைய அவரவர்
வசதிப்படி நிலவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
வீட்டுக்குள் அடைக்கப்பட்டுக் கிடக்கும் நாம்
கதவுகளை உடைத்து வெளியே வந்தால்
உலகம் முழுமையையும் இணைக்கும்
முழுநிலவையும், அதன் அழகையும்
அற்ப மனிதப் பிரிவுகளைத் தாண்டி உணரலாம்.
(தூறல் வரூம்)












Click it and Unblock the Notifications