செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Subscribe to Oneindia Tamil
கோவைத் துளிகள்...

ஊட்டி மலர்க் கண்காட்சிக்கு அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு

கோயம்பத்தூர்:

நீலகிரியில் தேயிலை விலை வீழ்ச்சி தொடர்பாக பிரச்சினை நிலவுவதால் இந்த ஆண்டு ஊட்டியில் மலர்க் கண்காட்சியை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஊட்டியில் ஞாயிற்றுக்கிழமை, மலர்க் கண்காட்சி தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் டி.ஆர்.ஓ. நல்லுச்சாமி, எஸ்.பி. ராமமூர்த்தி தலைமையில்நடந்தது.

எம்.பி. மாஸ்டர் மாதன், எம்.எல்.ஏ. குண்டன், அரசு கொறடா முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீலகிரியில் தேயிலை விவசாயிகள்,விலை வீழ்ச்சி காரணமாக பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகளின் உணர்வை மதித்து இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியை ரத்து செய்ய வேண்டும் என அனைத்துக்கட்சியினரும் கோரினர்.

மலர்க் கண்காட்சியை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், தேயிலை விவசாயிகள் சங்க போராட்டக் குழுத் தலைவர் உச்சி கெளடர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் கொண்ட குவு மீண்டும் பிரதமர்வாஜ்பாயை சந்தித்துப் பேசி தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, நேற்று நீலகிரியில், பல இடங்களில் தேயிலை விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சுற்றுலாப் பயணிகள்பாதிப்படைந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கோத்தகிரியில் 2000 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தேயிலை, ரப்பர், காபித் தொழிற்சாலைகள் நலிவடையாமல் பாதுகாக்கக் கோரி தென்னிந்தியத் தோட்டத்தொழிலாளர்கள் சங்கம் மூன்று நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

கோவையில் நடந்த இச்சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொழிலாளர் நலச் சட்டங்கள், தேயிலைக்கு ஆதார விலை உள்படபல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+