செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Subscribe to Oneindia Tamil
தந்தை இறந்த பிறகு மைனர் குழந்தைக்குத் தாய்தான் காப்பாளர் - நீதிமன்றம் தீர்ப்பு

ஜெய்ப்பூர்:

தந்தை இறந்தபிறகு மைனர் குழந்தைக்குத் தாய்தான் காப்பாளர் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சந்திரகாந்தா என்பவர் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு மீது நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது. சந்திரகாந்தா மனு விவரம்:

என்னுடைய கணவர் தவுலத் ராம் சோனி கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி இறந்துவிட்டார். எனது 7 வயது மகன் பாவன், ஜெய்ப்பூரில் உள்ளஉபாத்யாயா பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு ஜூன் 20-ம் தேதி பள்ளிக்குச் சென்ற எனது மாமனார் பன்சிலால், எனது மகனை அழைத்துச்சென்றுவிட்டார்.

அன்றிலிருந்து எனது மகனை வீட்டில் அடைத்து வைத்துக் கொண்டு என்னிடம் ஒப்படைக்க மறுக்கிறார். இது சட்டவிரோதம். எனது மகனை மீட்டுத்தாருங்கள் என்று மனுவில் சந்திரகாந்தா குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எல். குப்தா, ஜெ.சி. வர்மா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. சந்திரகாந்தாவின் முறையீடு நியாமாக உள்ளது.தந்தை இறந்தபிறகு, மைனர் குழந்தைக்குத் தாய்தான் உண்மையான காப்பாளர் என்ற முறையில் சந்திரகாந்தாவின் முறையீட்டை ஏற்றுக்கொள்கிறோம். குழந்தையின் தாத்தா எந்த வகையிலும் குழந்தைக்குச் சொந்தம் கொண்டாட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தாயை விட என்னிடமே குழந்தை பாவன் அதிக ஈடுபாடு காட்டுவதாகக் கூறுவதால் மட்டும் பன்சிலாலின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது. கணவர் இறக்கும்வரை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பத்தில் சந்திரகாந்தா இருந்துள்ளார்.

அதனால், தாத்தா பன்சிலாலிடம் பாவனுக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அனேகமாக எல்லா கூட்டுக் குடும்பத்திலும் பெற்றோர்களை விடதாத்தா, பாட்டியிடம்தான் குழந்தைகளுக்கு அதிக ஈடுபாடு ஏற்படுவது என்பது சாதாரண விஷயம்.

இந்த வழக்கில் பன்சிலாலின் கோரிக்கையை ஏற்று அவரிடம் பாவன் வளர அனுமதிக்க முடியாது. தாயிடம் பாவன் வளர்ந்தால் பண வசதி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்படும் என்பதையும் ஒப்புக் கொள்ளமுடியாது. சந்திரகாந்தா தற்போது தனது சகோதரருடன் வசிக்கிறார். அவர் வேலை செய்தால்வருமானம் கிடைக்கிறது.

ஆகவே, உண்மையான காப்பாளர் என்ற முறையில் தாய் சந்திரகாந்தாவிடம்தான் பாவன் வளரவேண்டும். அப்போதுதான் அவனுக்கு குடும்பநெறமுறைகளைக் கற்றுத் தருவதுடன் கல்வி மற்றும் வளர்ச்சியில் சந்திரகாந்தா அதிக அக்கறை காட்டமுடியும்.

மேலும், சந்திரகாந்தாவுக்கு வேறு நபருடன் எந்த சட்டவிரோதமான தொடர்பும் இல்லை. அவர் நல்ல மனம் மற்றும் உடல் நலத்துடன் உள்ளார்.ஆகவே, அவரிடம்தான் பாவன் வளரவேண்டும் என்று தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+