செயலை விட அதன் பயனை நேசித்தால்!
பாட்னா:
விட்டால் சாமியார் ஆகவிடுவார் போலத் தெரிகிறது லல்லு பிரசாத் யாதவ்.
அரசியல் கலாட்டாவிலிருந்து விலகி அமைதியாக ஒரு ஆசிரமத்தில் குடியேறிவிட நினைக்கிறேன் என்கிறார் பிகார்முன்னாள் முதல்வரும் இப்போதைய முதல்வர் ராப்ரி தேவியின் கணவருமான லாலு பிரசாத் யாதவ்.
சித்ரூகூடத்தில் உள்ள ஒரு ஆசிரமம் தான் லாலுவை அமைதி நோக்கி இழுக்கிறது. ஆனால், சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவினர், வழக்குகளும் அவரை அமைதியாக வாழ விடுமா என்பது சந்தேகம் தான்.
இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் லல்லுவை மீண்டும் சிறையில் தள்ள சிபிஐ கடும் முயற்சியில்இறங்கியுள்ளது. அரசு நிதியை சுருட்டிய வழக்குகளை சிபிஐ வேகப்படுத்தியுள்ளது.
36 ஜெயிலில் இருந்த லல்லு நல்ல பாடங்களைப் படித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இனி பொறுப்பாகப்பேசுவேன் என்கிறார். எதற்கெடுத்தாலும் மிக விளையாட்டா பதில் சொல்லியதால் தான் பல பிரச்சினைகளில்சிக்கிவிட்டேன் என்கிறார்.
முன்பு ஒரு முறை நிருபர்களிடம் லல்லு பேசுகையில், சிபிஐயை பீகாரை விட்டே விரட்டுவேன் என்றார். இதனைமிகப் பெரிய பிரச்சனையாக்கிய சிபிஐ நீதிமன்றத்திலும் புகார் கூறியது.
இப்போது அதே லல்லு வேறுமாதிரி பேசுகிறார். புத்தமத புத்தகங்கள், பகவத் கீதையை படித்து வருகிறேன். இதன்மூலம் எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என்பதை தெரிந்து கொண்டுள்ளேன் என்கிறார்.
இப்போதுள்ள வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள்வரை லல்லு சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.












Click it and Unblock the Notifications