செயலை விட அதன் பயனை நேசித்தால்!
சென்னை:
விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க இயலாது.
இலவச மின்சாரம் வழங்குவது தொடரந்தால் தமிழக மின்வாரியத்தை மூடும் நிலை ஏற்படும் என்று தமிழகமின்வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் திங்கள் கிழமை அன்று கேள்வி நேரம் முடிந்ததும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்வழங்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி த.மா.கா. உறுப்பினர் டாக்டர் ராமன் சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்தார்.
இத் தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கனவே விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
குடிசை வீடுகளுக்கு ஒரு விளக்கு எரிய இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
இதற்கே பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இந் நிலையில் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசால் இயலாது.
விவசாயம, வீடுகள் என்று தொடர்ந்து விசைத்தறிக்கும் இலவச மின்சாரம் தொடர்ந்தால் தமிழக மின் வாரியத்தைமூட வண்டிய நிலை தான் ஏற்படும்.
ஏற்கனவே இங்குள்ள விவசாயிகளுக்கு 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 52 காசு தான் கட்டணம்வசூலிக்கப்படுகிறது.
10 எச்.பி.வரை பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்றார்.