For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியை அடித்துத் துன்புறுத்திய கிரிக்கெட் வீரர் கைது

By Staff
Google Oneindia Tamil News

லக்னெள:

மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், உத்திரப்பிரதேச மாநில ரஞ்சி கிரிக்கெட் அணி கேப்டனுமான கைனேந்திரபாண்டே செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

இது குறித்து லக்னெள மாவட்ட போலீஸ் அதிகாரி பிராஜ் பூஷண் பக்ஷி கூறியதாவது:

பாண்டே தனது மனைவியை கடந்த பல நாட்களாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மனைவியை அவர் துன்புறுத்தியதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால்,பாண்டே அடித்ததால் அவரது மனைவி பிரதிபாவின் முகம், உடல் பகுதிகளில் காயமேற்பட்டுள்ளது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

கணவரின் துன்புறுத்தலால் பலமுறை பிரதிபா மயக்கமுற்றுள்ளார். தனி அறையில் அடைத்து வைத்து கடுமையாகத் துன்புறுத்தியுள்ளார். பிரதிபாகொடுமைப்படுத்தப்படுவதாகக் கிடைத்தத் தகவலை அடுத்து பிரதிபாவின் தந்தை, தாய், சகோதரி ஆகியோர் பாண்டே வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்குஉடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த பிரதிபாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிரதிபாவுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள பிரதிபாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகபிரதிபாவின் தந்தை, காஸிபூர் போலீஸில் புகார் கொடுத்தார். இப் புகாரின் பேரில் லக்னெள, இந்திரா நகரில் உள்ள வீட்டிலிருந்து கைனேந்திர பாண்டே கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பாண்டேயிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றார் பக்ஷி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X