செஸ்: இரு இந்திய வீரர்களுக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
புது தில்லி:
சர்வதேச செஸ் அமைப்பான பிடா", இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் குந்தே மற்றும் கே. சசிகிரண் இருவருக்கும்கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இம் மாதம் 13 மற்றும் 14-ம் தேதிகளில் லண்டனில் கூடிய பிடாவின் தலைமை அமைப்புக் கூட்டத்தில் இந்தியவீரர்கள் இருவருக்கும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அபிஜித் குந்தே, சசிகிரண் தவிர, அதானு லஹிரி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹுமோபி இருவருக்கும்சர்வதேச மாஸ்டர் பட்டங்களை வழங்கியுள்ளது.
தற்போது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இருவரையும் சேர்ந்து இந்தியாவில் 5 பேர் கிராண்ட் மாஸ்டர் பட்டம்பெற்றுள்ளனர். உலகின் இரண்டாம் நிலை வீரர் விஸ்வநாதன் ஆனன்த், திவ்யேந்து பரூவா, பிரவீன் திப்ஸேஆகியோர் ஏற்கெனவே கிராண்ட் மாஸ்டம் பட்டம் பெற்றுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications