தமிழகத்தில் இன்று
டெல்லி:
சியரா லியோன் நாட்டில் தீவிரவாதிகளை அடக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள இந்திய அமைதி காக்கும் படையில் மேலும் கூடுதல் வீரர்கள்அனுப்பட்டுள்ளனர்.
கிரெனடியர் பிரிவைச் சேர்ந்த படையினர் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் இந்தக் கூடுதல் படையில் இடம் பெற்றுள்ளனர்.திங்கள்கிழமை இந்தப் படையினர் சியரா லியோனுக்குப் புறப்பட்டுச் சென்றனர். தீவிரவாதிகள் பிடியில் 25 இந்தியப் படையினர் இன்னும் சிக்கியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
அடுத்த ஐந்து நாட்களில் 1500 இந்தியத் துருப்புகள் சியரா லியோன் செல்லவுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விமானங்களில் இந்தியப் படையினர்சியரா லியோன் செல்கின்றனர். ஏற்கனவே, இந்திய ராணுவத்தின் கூர்க்கா பிரிவைச் சேர்ந்த 1612 வீரர்கள் சியரா லியோனில் உள்ளனர்.
தற்போது செல்லும் கிரேனடியர்கள் பிரிவில் 800 வீரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர 130 கமாண்டோக்களும் செல்கின்றனர்.
தலைநகர் ஃப்ரீடவுன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இவர்கள் நிறுத்தப்படுவார்கள். அங்குள்ள இங்கிலாந்துப் படையினருடன் இணைந்து இவர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவர்.
கடந்த ஆண்டு கார்கில் போரில் சிறப்பாக செயல்பட்டவர்கள் கிரெனடியர் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அடுத்த மாதம்தான் இவர்கள்சியரா லியோன் செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதால் முன்னதாகவே இந்தியப் படையினர்அனுப்பப்பட்டுள்ளனர்.
139 பினைக் கைதிகள் விடுவிப்பு:
இதற்கிடையே, தாங்கள் பிடித்து வைத்திருந்த 139 பினைக் கைதிகளை தீவிரவாதிகள் திங்கள்கிழமை விடுவித்தனர். இவர்கள் அனைவரும் சர்வதேசராணுவப் படையினர்.
விடுவிக்கப்பட்ட அனைவரும் லைபீரியாவுக்கு அனுப்பப்பட்டனர். இன்னும் 347 வீரர்கள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர்.
தீவிரவாதிகள் அமைப்புடன் நல்ல உறவு வைத்துள்ள லைபீரிய அதிபர் சார்லஸ் டெய்லரின் முயற்சியினால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். டெய்லர் கூறுகையில்,தீவிரவாதிகள் வசம் உள்ள மற்ற வீரர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications