தமிழகத்தில் இன்று
இஸ்லாமாபாத்:
நவாஸ் ஷெரீப் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோகோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வானொலியான வாய்ஸ் ஆப் அமெரிக்காவில் அவர் கொடுத்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்:
ஷெரீப் உள்பட கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் முஷாரப் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதன்மூலம் அரசியல்வாதிகளுடனான ராணுவ ஆட்சியின் மோதல் போக்கு முடிவுக்கு வரும்.
நாட்டில் அதிகரித்துள்ள ஊழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஊழலை ஒழிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முஷாரப் அரசு பேசவேண்டும். அனைத்துத் தரப்பினும் ஒருங்கிணைந்து இதற்கு முடிவு கட்ட வேண்டும். இதுதொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். ஏற்கனவே உள்ளசட்டம் ஒருதலைப்பட்சமானது. அதை ரத்து செய்ய வேண்டும்.
நல்ல ஆட்சி நடத்த ராணுவத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை முஷாரப் தலைமையிலான அரசு தவற விட்டு விட்டது.
காஷ்மீர் விஷயத்தில் உலக அரங்கில் பாகிஸ்தான் தனிப்ைபடுத்தப்பட்டு விட்டது. ராணுவப் புரட்சியே இதற்குக் காரணம். அதை பாகிஸ்தானியர்கள் மனதில்கொள்ள வேண்டும்.
காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் உடன்பாடு காண இயலாவிட்டால் இரு நாட்டு எல்லைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இரு நாட்டு மக்களுக்கிடையே நம்பிக்கை, நல்லுறவை வளர்க்க வேண்டும். உருப்படியான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாதகமானசூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தீவிரவாதத்தை ஆதரித்ததாகவோ அல்லது நாட்டை பொருளாதாரச் சீரழிவுக்கு உள்ளாக்கியதாகவோ எனதுஅரசு மீது புகார் கூறப்பட்டதில்லை. ஆனால் இப்போது அதுபோன்ற புகார்கள் வருகின்றன என்றார் அவர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications