Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
நாளை முதல் மீண்டும் டயர் உற்பத்தியை துவக்கிறது டன்லப் நிறுவனம்

கல்கத்தா:

நாளை முதல் முழு வீச்சில் டயர் உற்பத்தி துவங்கும் என்று டன்லப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சிறந்த டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டன்லப் இந்தியா நிறுவனம், கடந்த இரண்டுஆண்டுகளாக டயர் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தது. கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மீண்டும் டயர் உற்பத்தியைத்துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.

டன்லப் நிறுவனத்துக்கு மேற்கு வங்க மாநிலம் சாஹாகன்ச் என்ற இடத்திலும், தமிழகத்தில் அம்பத்தூரிலும் டயர்தயாரிப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. இரு தொழிற்சாலைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள்சமீபத்தில் முடிவடைந்தன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் இரு தொழிற்சாலைகளிலும் முழு வீச்சில் டயர்உற்பத்தி துவங்கும்.

கனகர வாகனங்களுக்கான டயர்கள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான டயர்கள், டிராக்டர் டயர்கள்ஆகியவற்றுடன் வி பெல்டுகள் போன்றவையும் உற்பத்தி செய்யப்படும். பாதுகாப்புத் துறையிடமிருந்துவிமானங்களுக்கான டயர்கள் தேவை என்று ஆர்டர் வந்துள்ளது. தற்போது சாஹாகன்ச் தொழிற்சாலையில் விமானடயர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த டயர் உற்பத்தி மே 22 முதல் முழு வீச்சில் நடைபெறும் என்றார்டன்லப் இந்தியா நிறுவனத் தலைவர் முரளி டி. சுக்லா தெரிவித்தார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+