தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அ-டுத்-து திமுக ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சரவையில் -சே-ர மாட்டோம்: பாஜக
திருச்சி:
வரும் தேர்தலில் திமுக ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் நாங்கள் பங்குகேட்க மாட்டோம் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எஸ்.பி.கிருபாநிதிகூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடும் போது நாங்கள் அதிக இடங்கள் கேட்போம். ஆனால்அமைச்சரவையில் இடம்பெற எந்தவித நிபந்தனையும் விதிக்கமாட்டோம்.
தேர்தல் விரைவில் வந்தாலும், தாமதமாக வந்தாலும் அதைச் சந்திக்க நாங்கள் தயாராகஇருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மற்றும்தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனையில் நாங்கள் தலையிடமாட்டோம்.
பாமக, மற்றும் மதிமுக இரண்டும் இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ளமுடிவை ஆமோதிக்க வேண்டும் என்றார் கிருபாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications