தமிழகத்தில் இன்று
கொழும்பு:
என்னைக் கொன்றாலும் யாழ்ப்பாணத்தில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை ராணுவத்தினர் வாபஸ் பெற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் எச்சரிக்கை குறித்து அதிபர் சந்திரிகா கருத்துத் தெரிவிக்கையில், ராணுவம் வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. என் உயிரேபோனாலும் ராணுவத்தை வாபஸ் பெற உத்தரவிட மாட்டேன்.
என்னைக் கொல்ல விடுதலைப் புலிகள் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் அவர்கள் வெற்றியடையப் போவதில்லை.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண அமைதி வழியே சரியானது. அமைதிப் பேச்சுக்காக போர் நிறுத்தம் மேற்கொண்டாலும் கூட யாழ்ப்பாணத்தில்உள்ள ராணுவம் வாபஸ் பெறப்பட மாட்டாது. இதையே கடந்த மூன்று ஆண்டுகளாக விடுதலைப் புலிகளிடம் கூறி வருகிறேன்.
புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் மட்டுமே அவர்களுடன் அரசு பேச்சு நடத்தும் என்றார் சந்திரிகா.