தமிழகத்தில் இன்று
அகர்தலா:
திரிபுராவில் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகளால் 25 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
திரிபுராவின் கோவாய் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்தப் படுகொலையை அடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தக் கோரிமாநில அரசு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் வன்முறைச் சம்பவத்தினால் அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அப்பகுதியில்நடமாடும் தீவிரவாதிகளைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
படுகொலைச் சம்பவத்தையடுத்து டெலியாமுரா, கல்யாண்பூர், கோவாய் பகுதிகளில் புறராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். அப்பகுதியில்தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடந்த இருபத்து நாண்கு மணி நேரத்தில் திரிபுராவில் 34 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.