தமிழகத்தில் இன்று
சென்னை:
காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பாக கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டெல்லியிலிருந்துசனிக்கிழமை இரவு சென்னை திரும்பிய முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களை அவர் சந்தித்தார். அப்போது இந்துஸ்தான் டைம்ஸ் இதழில், இலங்கை ராணுவத் தளபதிஇந்தியாவிற்கு வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் நீங்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினீர்கள் என்று செய்தி வெளியிடப்பட்டிக்கிறதே என்றுநிருபர்கள் கேட்டனர்.
அதற்கு கருணாநிதி, பிரதமரிடம் இலங்கையைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. காவிரிப் பிரச்சினைக்காக ஒதுக்கப்பட்ட நேரம் மீதம் இருந்தது. அதைப்பயன்படுத்திக் கொண்டு பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேலும் திட்டக் குழு மூலமாகவும், நிதி அமைச்சர் மூலமாகவும் தமிழ்நாட்டின்தேவைகளை எல்லாம் எடுத்துரைத்தேன்.
கேள்வி: காவிரிப் பிரச்சினையால் கர்நாடக முதல்வர் சில கருத்துக்கள் கூறியிருப்பது பற்றி?.
பதில்: கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, நான் வருவேன் என்று நீங்கள் டெல்லிக்குப் புறப்பட்டிருந்தால்மன்னித்துக் கொள்ளுங்கள். என்று மிகுந்த நாகரீகமாக தன்னுடைய நிலையை விளக்கியதே தக்க சான்றாகும்.அது மாத்திரமல்ல. டெல்லியில் உள்ளகர்நாடக பவனில் இருந்து எனக்கு பூங்கொத்தும் அனுப்பி வைத்தார்.
பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடைபெறுகின்ற நேரமாக இருப்பதாலும், தனக்கு முன் கூட்டியே போதுமான அவகாசம் தந்து தேதி குறிப்பிடாததாலும்தான்வர முடியவில்லை. விரைவில் நாம் கலந்து பேசி டெல்லியில் சந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அவருக்கு ஏன் அவகாசம் தேவைப்படுகிறதுஎன்றால், காவிரி ஆணையம் அமைக்கும்போது அவர் முதல் அமைச்சராக இல்லை. படேல் இருந்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலில் நடைபெறுகின்ற கூட்டம் இது என்பதால் அதுபற்றிய விவரங்களை அவர் அறிந்து கொண்டுவருவதற்கும் இந்த அவகாசம் தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை என்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications