மேட்ச் பிக்ஸிங்: சி.பி.ஐ. கேள்விகளுக்கு நாளை பதில் அனுப்புகிறார் பிந்த்ரா
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங், பெட்டிங், கபில் தேவ் பணம் வாங்கியது ஆகியவை குறித்து தான் கூறிய புகாருக்கு சி.பி.ஐ. தரப்பில் கேட்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு,முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஐ.எஸ்.பிந்த்ரா, திங்கள்கிழமை பதில் அளிக்கவுள்ளார்.
360 பக்கம் கொண்ட பிந்த்ரா கூறிய புகார் குறித்து தெளிவாக ஆராய்ந்த சி.பி.ஐ., இதுதொடர்பாக சில கேள்விகள் கேட்டு பிந்த்ராவுக்கு பதில்அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக பிந்த்ரா கூறுகையில், சி.பி.ஐயின் கேள்விகளுக்குப் பதில் தயாரித்துக் கொண்டுள்ளேன். திங்கள்கிழமை இவற்றை சி.பி.ஐக்குஅனுப்பவுள்ளேன் என்றார்.
சி.பி.ஐ. தரப்பில் என்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை பிந்த்ரா விளக்கவில்லை. பிந்த்ராவிடமிருந்து வரும் விளக்கத்தின் அடிப்படையில்தேவைப்பட்டால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஏற்கனவே சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 15-ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஆஜராகிய பிந்த்ரா தான் கூறிய புகார்கள் குறித்து விளக்கமளித்தார்.
யு.என்.ஐ.