For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
தேர்தலில் வெற்றி பெறவே காவிரி நீர் ஆணையம் மீது ஜெ. புகார்: கர்நாடக அமைச்சர்

பெங்களூர்:

அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பலன் பெறவே, காவிரி நதிநீர் ஆணையம்குறித்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேவையில்லாத புகார்களைக் கூறி வருகிறார் என்று கர்நாடகநீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.என்.நாகேகெளடா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி நதிநீர்ப் பிரச்சனையால் தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிங்கள்பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி நதி நீர்ப்பிரச்சனை குறித்து அமைக்கப்பட்ட காவிரிநதிநீர் ஆணையத்தைஜெயலலிதா குறை கூறியுள்ளார். முதலில் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியவர்ஜெயலலிதா. தற்போது அது அமைக்கப்பட்டது தவறான முடிவு என்று அவர் கூறுகிறார். இது முன்னுக்குப் பின்முரண்பாடானது.

1998 ம் ஆண்டு காவிரிநதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. இது பிரதமர் வாஜ்பாய் தலைமையில்அமைக்கப்பட்டது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி 205 டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும். நாங்கள் அதற்கு மேலும் தண்ணீர் வழங்கியுள்ளோம்.

இதுகுறித்து ஜெயலலிதா எங்களைக் குறை கண்டுபிடிப்பதும், காவிரி நதிநீர் ஆணையத்தைக் குறை கூறுவதும்தவறானதாகும். அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இவ்வாறு வெற்று அறிக்கைகள் விடுகிறார்.

காவிரி நதி நீர் ஆணையத்தின் செயல்பாடு குறித்து தெளிவற்ற நிலை நிலவுகிறது. எனவேதான் இவ்வளவுகுழப்பங்களும். இதுகுறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X