தமிழகத்தில் இன்று
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மற்றும் வர்த்தகர்கள் அழைப்பு விடுத்திருந்த பொதுவேலை நிறுத்தம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
இதனால் பாகிஸ்தானில் பொது வாழ்க்கை ஸ்தம்பித்தது. வியாபார ஸ்தலங்கள் அனைத்தும் மூடியே கிடந்தன. இதுகுறித்து உள்துறை அமைச்சர் முகைதீன்ஹைதர் கூறுகையில், அடிப்படைவாதிகளின் வேலை நிறுத்தத்தால், பாகிஸ்தானில் இரண்டு நாட்களாக பொதுமக்களின் வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
பொருட்களுக்கு அரசு விதித்திருந்த வரியைக் ரத்து செய்யக் கோரி வர்த்தகர்கள் மற்றும் அடிப்படைவாதிகள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர்.
19 இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் இந்த வரிவிதிப்பை எதிர்த்தும், பெர்வீஸ் முஷாரப்புக்கு கண்டனக் குரல் கொடுத்தும் இந்த வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டனர்.
சர்வதேச நிதியம் பாகிஸ்தானிற்கு வியாழக்கிழமை வந்து வரிவிதிப்பு குறித்து வர்த்தகர்களுடன் நடத்தியபேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் முழு வீச்சில் தொடங்கியது.
ஐ.ஏ.என்.எஸ்.