தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராஜீவ் காந்தியின் 9-வது ஆண்டு நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 9-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவர் படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் நினைவிடத்தில்பல்வேறு தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலைசெய்யப்பட்டார்.
9-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, மாநில காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, குமரி அனந்தன்உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications