For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
தனுஷ்கோடி வந்தனர் 70 இலங்கை தமிழ் அகதிகள்

ராமநாதபுரம்:

யாழ்ப்பாணத்திலிருந்து 70 தமிழ் அகதிகள் ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெறும் சண்டையை ஒட்டி இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரத்துவங்கியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணியளவில் 70 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் திட்டு ஒன்றில் இருந்ததைப் பார்த்த ராமேஸ்வரம்மீனவர்கள், போலீஸாருக்குத் தகவல் தந்துள்ளனர்.

தகவல் அறிந்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சேஷாயி நடுக்கடலில் தவித்த அகதிகளை மீட்டு கரைக்குக் கொண்டு வரச் செய்தார். பின்னர்அவர்கள் மண்டபம் முகாமில் சேர்க்கப்பட்டனர்.

தீவிர ரோந்துப் பணி:

இதற்கிடையே, அரக்கோணத்தில் இருந்து ராணுவப் படை விமானங்கள் இந்தியக் கடல் எல்லையில் ஆழ்கடல் பகுதிக்கு பறந்து சென்று விடுதலைப்புலிகள் நடமாட்டம் உள்ளதா என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் பகுதியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள், ராமேஸ்வரம் கடல் பகுதியில் அடிக்கடி பறந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X