தமிழகத்தில் இன்று
கோயம்புத்தூர்:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தருவது தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் நல்லதல்ல. விடுதலைப் புலிகள் தமிழர்களின் விரோதிகள் என்று தமிழக சட்டசபைஎதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், துரைமுருகன் மீது நான் கூறிய புகார்கள் அப்படியே உள்ளது. இதில் மாற்றமில்லை. ஆனால்இருவரும் சமரசமாக உள்ளோம்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு தமிழர்கள் பலியாகியுள்ளனர். விடுதலைப் புலிகள் நடத்திய தமிழ்த் தலைவர்களைப் படுகொலைசெய்துள்ளனர். ராஜீவ் காந்தியையும் கொலை செய்துள்ளனர். தமிழர் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரிப்பது தமிழர்களுக்குநல்லதல்ல.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்வது இந்திய அரசின் கடமை. விடுதலைப் புலிகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப விரும்பாதவர்கள். தமிழ் அகதிகளுக்குஉதவ வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
தியாகிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் பென்ஷனை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. எக்காரணத்தைக் கொண்டும் தியாகிகள் பென்ஷனைநிறுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.