For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஐ.நா.வில் புலிகள் பிரச்சினை குறித்த விவாதத்தைத் தவிர்க்க இலங்கை முயற்சி
கொழும்பு:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதம் நடப்பதைத் தடுக்கும் முயற்சியில் அந்நாடு இறங்கியுள்ளது.
பாதுகாப்பு சபையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டால் அதை நிராகரிக்க தங்களது வீட்டோ உரிமையைப்பயன்படுத்த வேண்டும் என்று சீனா மற்றும் ரஷியாவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
அரசுச் செய்தித்தாளான சண்டே அப்சர்வரில் இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில், ஐரோப்பிய நாடு ஒன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பாதுகாப்புசபையில் தீர்மானம் கொண்டு வரவிருப்பதாக இலங்கை வெளியுறவுத் துறைக்கு தகவல் வந்துள்ளது. எனவே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டால்,அதைவிவாத்திற்கு அனுமதிக்காமல் வீட்டோ உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று சீனா, ரஷியாவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்ஜ் நியூஸ்.
Story first published: Sunday, May 21, 2000, 5:30 [IST]