ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்-டி: -தீ-வி-ர பயிற்-சி எ-டுக்-கி-ற--து இந்திய அணி
புனே:
ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்குத் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இம்மாதம் 28-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி ஆசியக் கோப்பை ஒருநாள்கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள்பங்கேற்கின்றன.
இந்திய அணி சார்பில் 22 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் புனேயில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அணியின் பயிற்சியாளர் கபில்தேவ் தலைமையில் வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
புனேயில் மைதானத்தில் உடற்பயிற்சி மற்றும் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், அங்குள்ள தேசிய பாதுகாப்புஅகாதெமிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், தேசிய பாதுகாப்புஅகாதெமிக்கு அழைத்துச் செல்லப்பட்டது மிகுந்து ஆச்சரியத்தை அளித்தது. பயிற்சியின் இடையேபுத்துணர்ச்சிக்காக சுற்றுப் பார்ப்பதற்காக வீரர்கள் அங்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முதலில், அகாதெமியில் வீரர்களுக்கு சிறப்பு உடற்பயிற்சியும், ஓட்டப்பந்தயப் பயிற்சியும் அளிக்கப்படலாம் என்றுகருதப்பட்டது. ஆனால், அத்தகைய பயிற்சி எதையும் வீரர்கள் மேற்கொள்ளவில்லை.
இதற்கிடையே, பயிற்சியின்போது முகத்தில் காயம்பட்ட ராபின் சிங்குக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மைதானத்துக்கு வந்திருந்தபோதும் அவர் பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையே,காய்ச்சல் ஏற்பட்டுள்ள அகார்கர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முழு பயிற்சியில் ஈடுபட்டார்.
பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களுக்கு கபில்தேவே பந்து வீசினார். பிற்பகலில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்,விக்கெட் கீப்பிங் போன்ற துறைகளில் சில முக்கிய குறிப்புகளை வீரர்களுக்கு அவர் தெரிவித்தார். இந்தியடென்னிஸ் அணியின் பயிற்சியாளர் நரேந்திரநாத் வந்திருந்து வீரர்களுக்கு கேட்சிங் பயிற்சி அளித்தார்.
யு.என்.ஐ.