For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
ஆசியாவுக்-கு ஒரே கரன்சி

டாக்கா:

ஐரோப்பிய நாடுகளில் உள்ள "ஈரோ", ஆசியாவிலும் ஒரே மாதிரியான கரன்சி முறையைக் கொண்டு வர வேண்டும் என்று வங்கதேச தலைநகர்டாக்காவில் நடந்த தெற்காசிய ரிசர்வ் வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்காவில் நடந்த 29-வது ஆசிய கரன்சி கழக உறுப்பினர்கள் மாநாட்டில் வங்கதேச ரிசர்வ் வங்கி கவர்னர் முகம்மது பரசுதீன் பேசுகையில், இதுநிறைவேறுவதற்கு நிச்சயம் நீண்ட காலம் பிடிக்கலாம். ஆனால் காலதாமதம் ஆவதற்கு முன் இப்போதே அதுகுறித்த முன் நடவடிக்கைகளைத் துவக்குவதுநல்லது என்றார்.

இக்கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலன், மியான்மர் மத்திய வங்கியின் கியா கியா மாங்க், நேபாள ராஷ்ட்ர வங்கியின் தலைவர் திலக்ரவல், பாகிஸ்தான் ரிசர்வ் வங்கி தலைவர் இஷ்ரத் ஹுசைன், பூடான் தலைமை வங்கியின் நிர்வாக இயக்குநர் சோனம் வாங்சுக், ஈரான் மத்திய வங்கியின்துணை கவர்னர் முகம்மது ஜாபர் மொஜாரத், இலங்கை மத்திய வங்கியின் துணை கவர்னர் பெலனகே அமரசிங்கே ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் முயற்சியால் 1974-ல் ஆசிய கரன்சி கழகம் ஏற்படுத்தப்பட்டது. 1975 முதல் இயங்கத்துவங்கியது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X