கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
நானும் கட்சியில் சரியாக பணியாற்றாவிட்டால், என்னையும் தூக்கி எறிவார் ஜெயலலிதா என்கிறார் தினகரன்.
அதிமுவில் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக -நியமிக்கப்பட்டுள்ள -நாடாளுமன்ற உறுப்பினரும், சசிகலாவின் அக்காமகனுமான தினகரன், இப்போது மாவட்டவா-ரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும்செயல்வீரர்கள் கூட்டங்கள் -நடத்தி, கட்சிப் பணிகள் குறித்து பேசி வருகிறார்.
திருவள்ளூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தினகரன் பேசுகையில், கட்சிப் பணியில் ச-ரியாக செயல்படவில்லைஎன்றால் என்னையும் தூக்கி எறிய ஜெயலலிதா தயங்கமாட்டார் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
கட்சியை பலப்படுத்தவும், தேர்தலை சந்திக்கவும் அயராது உழைக்க வேண்டும்.பதவியில் இருப்பவர்களும், பதவிஇழந்தவர்களும் விசுவாசமாக செயல்பட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு மீண்டும் பதவி கிடைக்கும். ஜெயலலிதாவைநம்பியவர்கள் கெட்டதில்லை. நம்பாமல் கெட்டவர்கள் தெருவில் -நிற்கின்றனர்.
தங்களுக்கு கொடுக்கப்பட்ட பதவியை தவறாக பயன்படுத்தியவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.இதில் ஜெயலலிதா பாகுபாடுபார்ப்பதில்லை. யார் தவறு செய்தாலும் ஜெயலலிதாவிடம் தப்ப முடியாது. -நானே ச-ரியாக செயல்படவில்லை என்றாலும் விடமாட்டார். உடனடியாக தூக்கி எறிந்து விடுவார். அதில் சந்தேகமே வேண்டாம்.
மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை ஜெயலலிதா தலைமையில் நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக தொகுதி பணிகளை கவனிக்கஐவர் குழு அமைக்கப்பட்டு வருகிறது. அக்குழுவில் இளைஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றார் தினகரன்.