உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை

Subscribe to Oneindia Tamil
தேர்-தல் கூட்-ட-ணி கு-றித்-து கட்-சி-யி-ன-ரு-டன் விவா-திக்-கி-றா-ர் மூப்-ப-னார்

சென்னை:

கூட்டணி ஆட்சி கோரிக்கையை ஜெயலலிதா நிராக-ரித்து விட்ட -நிலையில், அடுத்தாண்டில் சந்திக்கவிருக்கும் சட்டமன்றத்தேர்தலில் எத்தகைய வியூகத்தை மேற்கொள்வது என்பது பற்றி விவாதிப்பதற்காக தமாகாவின் -நிர்வாகக் குழு கூடுகிறது.

இத்தகவலை தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

ஆட்சியில் பங்கு கொடுக்கத் தயா-ரில்லை என்று அதி-முக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ள-நிலையில், தமாகாவின் தோழமை கேள்விக்குறியாகி உள்ளது.

கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவதன் மூலம் மீண்டும் காமராஜர் ஆட்சிக்கு வழி காண -முடியும் என்ற -நம்பிக்கையில்இருந்தார் -மூப்பனார்.

ஆனால், அவரது விருப்பத்திற்கு ஜெயலலிதா தடை போட்டு விட்டதால், அடுத்து எத்தகைய அணுகுறையை தமாகாமேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜெயலலிதாவின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டு அவரோடு தோழமையை தொடருமா அல்லது மூன்றாவது அணி என்ற-மு-யற்சியில் இறங்கி மறுபடியும் சூடு போட்டுக் கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு விடை காண்பதற்காக கட்சியின் நிர்வாகக் குழுவை அவசரமாக கூட்ட -மு-டிவு செய்துள்ளார் -மூப்பனார். -முழுக்க -முழுக்ககூட்டணி விவகாரங்கள் பற்றி விவாதிப்பதற்காக இக்குழு சென்னையில் இன்னும் இரண்டு வாரங்களில் கூட்டப்படுகிறது என்றார்-மூப்பனார்.

இதுகுறித்து காஞ்சிபுரத்தில் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி: பாண்டிச்சேரியில் காங்கிரஸ் - தமாகா ஆட்சி அமைந்திருப்பது ஒரு பிள்ளையார் சுழி என்று கூறியுள்ளீர்களே... அதுதமிழ்நாட்டிலும் தொடருமா?

பதில்: முயன்றால் -முடியாதது எதுவுமில்லை. தமிழ்-நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலின் போது பார்த்துக் கொள்ளலாம்.

கேள்வி: ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இரு கட்சிகளும் இணைந்து அஞ்சலி செலுத்தியது பற்றி...?

பதில்: ராஜீவ் காந்தியின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளதால் தமிழ்நாட்டில் தமாகா, காங்கிரசுடன்இணைந்து செயல்படும்.

கேள்வி: அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: திமுக தலைவர் கருணா-நிதி கூட தனித்து ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளார். இதுசம்பந்தமாக தேர்தல் வருகிற-நரத்தில் கலந்து ஆலோசிக்கப்படும்.

கேள்வி: தமிழ்நாட்டில் பாமக - தமாகா இணைந்து மூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறப்படுகிறதே?

பதில்: நீங்களே வதந்தியை பரப்பாதீர்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறதே?

பதில்: விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் வளர்த்து விட்டனர். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும்,ஒற்றுமையையும் காக்க இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கை தேவை.

கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் தமாகாவின் வியூகம் எவ்வாறு அமையும்?

பதில்: அதுபற்றி எங்கள் கட்சியின் நிர்வாகக் குழு 15 நாட்களுக்குள் கூடி -முடிவெடுக்கும் என்றார் -மூப்பனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+