தமிழகத்தில் இன்று
சென்னை:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. காஞ்சி காமகோடிபீடாதிபதி சத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனார் உள்ளிட்டோர் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
14-ம் நூற்றாண்டுக்கும் முந்தைய ஆண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற காஞ்சி வரதராஜ சுவாமிகள் கோயில்தேர் பழுதடைந்திருந்தது. அதைச் சீரமைக்கும் பணி காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.65 லட்சம் செலவில்மேற்கொள்ளப்பட்டது. இப் பணியில் ஸ்தபதி வீரமணி தலைமையில் 35 பேர் ஈடுபட்டனர்.
வைகாசி பிரம்மோற்சவத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3.30மணிக்கு வரதராஜப் பெருமாள் சிலை அலங்கரிக்கப்பட்டு தேரில் உள்ள ஊஞ்சலில் வைக்கப்பட்டது.
காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் சீரமைக்கப்பட்ட இத் தேரைப் பராமரிக்கும் பொறுப்பை கோயில் நிர்வாக அதிகாரிசாம்பசிவத்திடம் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒப்படைத்தார். பின்னர் தேரில் ஏறி வரதராஜப் பெருமாளைத்தரிசித்தார்.
சங்கராச்சாரியாருக்கு பொன்னாடை அணிவித்து பரிவட்டம் கட்டப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமூப்பனாருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் வரதராஜப் பெருமாளின் தேரோட்டம்நடைபெற்றது.












Click it and Unblock the Notifications