Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து

Subscribe to Oneindia Tamil

இப்-போ-தைய காங்-கி-ரஸ் தலை-வர்
திண்-டி-வ--னம் ராம-மூர்த்-தி

தலை-வர்-க-ளுக்-கு ப-ஞ்-ச-மே-யில்-லா-மல் ஒ-ரு கட்-சி இ-ருக்-கி-ற-தென்-றால் அ-து தமிழககாங்கிரஸ் கட்சி தான். -தொண்டர்-கள், அ-வர்-க-ளின் எண்-ணிக்-கை கு--றித்--தல்-லாம் இங்-குயா-ருக்-கும் கவ-லை-யில்-லை.

ஆண்-டுக்--கு ஒ-ரு மு-றை இக் கட்-சி-யில் தலை-வர்-கள் மாற்-றம் இ-ருக்-கும். பத-வி இ-ழக்-கும்தலை-வர்-கள் பு-தி-ய -காஷ்-டி து-வக்-கு-வார். அவர் இத-ற்-கு முன் ப-த-வி இழந்-த -பி-றதலை-வர்-க-ளு-டன் -சர்ந்-து பு-தி-ய தலை-வ-ருக்-கு தொல்-லை கொ--டுப்-பார்.

-பு-தி-ய தலை-வ-ரும், பத-வி இழந்-த-பின் தன்-னை --கட்-சி-யில் நிலை நி-றுத்--திக் கொள்-வ-தற்-கா-கபத-வி-யில் இ-ருக்-கும்---பா-தே கோஷ்டி சேர்ப்-பார். சு-மார் 25 ஆண்--டு-கா--ல-மாய்ஆட்-சி-யை பிடிக்-க மு-டி-யா-மல் தொடர்ந்-து எதிர்க் கட்-சி--யாய், ஆ-ளும் கட்-சி-யின்-கூட்-ட-ணி-க் கட்-சி-யாய் பல அவ-தா-ரங்-கள் எ-டுத்-து வ-ந்-தி-ருக்-கி-ற-து காங்-கி-ரஸ். ஏற்-க-ன-வே,நிலை கு-லைந்-து போ--யுள்-ள கட்-சிக்-கு இப்-போ-து மீண்-டும் சிக்-கல்.

பு-தி-ய மாநி-லத் தலை-வர் வ-ரப் போகி--றார் என்-கி-றார்-கள். விரைவில் தலைமை மாற்றம்-இ-ருக்-கும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்அறிவித்துள்ளதை அடுத்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் புதிய தலைவர் யார் என்றசர்ச்சை எழுந்துள்ளது.

புதிய தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருணாசலம், தங்கபாலுஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் குமரி அனந்தன்,அன்பரசு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களும் தலைமை பதவிக்குமுயற்சித்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைமை பதவி என்பது மேலிட நியமன பதவி. எனவே,இப்பதவியில் ஆண்டுக் கணக்கில் நீடிக்க முடியவில்லை.அதிலும் வாழப்பாடிராமமூர்த்திக்கு பின்னர் வந்த தலைவர்களில் யாருமே ஓரிரு ஆண்டுகளைதாண்டியதில்லை. தங்கபாலு, -கு-ம-ரி அனந்தன், திண்டிவனம் என்று இந்த ஐந்தாறுஆண்டுகளில் தலைமை மாற்றம் தொடர்கிறது.

இப்பிண்ணனியின் காரணமாகவோ என்னவோ தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளுக்குபஞ்சமில்லாமல் போனது. அடிக்கடி தலைமை மாற்றம் ஏற்படும் போதெல்லாம் மாஜித்தலைவர்கள் தலைமையில் புதிய கோஷ்டி முளைத்துவிடுகிறது.

அந்த கோஷ்டிகள் புதிய தலைமையை எதிர்த்து உள்கட்சி அரசியல் நடத்துவதையேகடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும். இந்த அடிப்படையில் இக்கட்சியில்இதுவரை -கு-றைந்-த-பட்-சம் ஐந்தாறு கோஷ்டிகளாவ-து இருக்கின்றன. திண்டிவனம்ராமமூர்த்திஆதரவாளர்கள், தங்கபாலு ஆதரவாளர்கள், அனந்தன் ஆதரவாளர்கள்,அன்பரசு ஆதரவாளர்கள், பிரபு ஆதரவாளர்கள் என்று கோஷ்-டி-கள் அனுமார் வாலாய்நீள்-கின்-ற-ன.

இந்த அடிப்படையில் இக்கட்சியில் இதுவரை ஐந்தாறு கோஷ்டிகளுக்கு தலைமைஏற்றுள்ள எல்லாருமே கட்சித் தலைமையை பதவியை பிடித்துவிட வேண்டும்என்பதையே லட்சியமாக கொண்டுள்ளனர். அதற்காக கடந்த மாதத்தில் 20நாட்களுக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் அலுவலகத்தை சுற்றிவந்தனர்.

திண்டிவனம் ராமமூர்த்தியை மாற்ற வேண்டும் என்பதை முதல் லட்சியமாக கொண்டுஇக் கோஷ்டிகள் செயலில் இறங்கின. திண்டிவனத்திற்கு எதிராக புகார்களை தயார்செய்தனர். அந்த குற்றச் சாட்டுகளை பட்டியல் போட்டு அகில இந்திய தலைமையிடம்கோஷ்டி வாரியாக கொடுத்தனர்.

இந்த ஒரு விஷயத்தில் ஒருமித்த திட்டத்தோடு செயல்பட்டனர். அதற்கு வெற்றியும்விரைவில் கிடைக்கவிருக்கிறது என்பதை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ளகுலாம் நபி ஆசாத் டெல்லியில் வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்தியுள்ளார்.

பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரிக்கு புதிய காங்கிஸ் தலைவராக நாராயணசாமிநியமிக்கப்பட்ட தகவலை நிருபர்களிடம் தெரிவித்த போது, கூடவே தமிழககாங்கிரசுக்கும் விரைவில் தலைமை மாற்றம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆசாத்தின் இந்த அதிரடித் தகவல் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் தீடீர் பரபரப்பையும்சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தை மாற்ற வேண்டும் என்றுமுயற்சித்த பிரமுகர்கள் எல்லாம் உற்சாகமடைந்துள்ளனர்.

அவர்கள்ஆசாத்தின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில் ஒரு மாதத்திற்குமுன்பே இந்த முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்து விட்டது. பாண்டிச்சேரி தலைமைமாற்றத்துடன் சேர்த்து தமிழக தலைமை மாற்றத்தையும் அறிவித்துவிட வேண்டும்என்று டெல்லி மேலிடம் முடிவு செய்திருந்தது. ஆன்ால் கொஞ்சம் கால தாமதம்ஆகிவிட்டது. இது நாங்கள் எதிர்பார்த்ததுதான் என்றனர்.

திண்டிவனம் ஆதரவாளர்களோ நவம்பர் 1ல் மாநிலத் தலைமைக்கான தேர்தல்நடைபெற உள்ளது. அதற்கிடையில் நிச்சயம் தலைமை மாற்றம் இருக்காது. தலைமைமாற்றம் பற்றி சோனியா காந்தி தான் முடிவு செய்வார் என்கின்றனர்.

இதற்கிடையில் தலைமை பதவியை பிடித்து விட வேண்டும் என்ற வேகத்தில்காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் மீண்டும் டெல்லிக்கு படையெடுக்கதீர்மானித்துள்ளனர். ஏற்கனவே சிலர் டெல்லியில்தான் உள்ளனர்.

அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சையில், தமிழக தலைவர்களில் ஆசாத்துக்குநெருக்கமானவர் தங்கபாலு, எனவே அவருக்குத்தான் மீண்டும் தலைவர் பதவிகிடைக்கும் என்று தங்கபாலு ஆதரவாளர்கள் சொல்கின்றனர். அப்படி அவருக்குகிடைக்கவில்லை என்றால், அவர் சொல்கிறவருக்குத்தான் தலைவர் பதவி கிடைக்கும்என்கின்றனர்.

ஆனால். இதை அனந்தன், பிரபு, அருணாசலம் போன்றவர்களின் ஆதரவாளர்கள்மறுக்கின்றனர். பஞ்ச்மாரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதீர்மானத்தின்படி ஒரு முறை தலைவர் பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் பதவிதரப்படக் கூடாது. எனவே இந்த விதியை சோனியா மீற மாட்டார் என்கின்றனர்.

இச் சூழ்நிலையில் அடுத்த தலைவராக வருவதற்கு மணி சங்கர அய்யர். அருணாசலம்,அன்பரசு. ஈவிகேஎஸ். இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன் எம.பி போன்றபுதுமுகங்களும் முயற்சிக்கின்றனர்.

இவர்களில் அருணாசலத்திற்கு அதிகமான வாய்பபு உள்ளதாக தமிழக காங்கிரஸ்வட்டாரம் சொல்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+