கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
தனது நாட்டுடனான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவையை இந்தியா விரைவில் தொடங்கும் என்று நேபாளம்நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது.காத்மாண்டு விமான நிலையத்தில் பாதுகாப்புக் குறைவு காரணமாக இச் சம்பவம் நடந்ததாக விசாரணையில்தெரியவந்தது. இதையடுத்து, நேபாள நாட்டுடனான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவையை இந்தியாநிறுத்தியது.
இத் தடையால் இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் நேபாளம் செல்ல முடியவில்லை. இதனால்,அந் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 23,395 பேர் மட்டுமேநேபாளம் சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 37 சதவீதம் குறைவாகும். சுற்றுலாப் பயணிகளின் வரவுகுறைவால் அந் நாட்டுக்கு சுமார் ரூ.65 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் அன்னியச் செலாவணி வருவாயில் 14 சதவீதம் சுற்றுலாவின் மூலம் கிடைக்கிறது. இந்தியசுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவால் பெரும் நஷ்டத்தை நேபாளம் சந்தித்துள்ளது. அடுத்த மாதம்நேபாளத்தில் சீசன் தொடங்க உள்ளது. அதற்குள் விமான சேவையை இந்தியா தொடங்கும் என்று நேபாளம்எதிர்பார்க்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications