For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
நீலகிரியில் அமைதி திரும்பியது
கோவை:
நீலகிரியில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியது. கடந்த சில தினங்களாக நீலகிரியில் தேயிலை வீழ்ச்சியை ஒட்டிவிவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதில் 5 பஸ்கள் எரிக்கப்பட்டன. 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இங்கு ஏற்பட்ட கலவரத்தால் சுற்றுலா பயணிகள் வருகைபெருமளவில் குறைந்து போனது.
தமிழக முதல்வர் தேயிலைக்கு ஆதார விலை அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக அளித்த உறுதியின்பேரில் திங்கள்கிழமை முதல் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
இதையடுத்து இங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. சுற்றுலா பயணிகள் வரத்து தொடங்கியுள்ளது. பஸ்கள்வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன.
Comments
Story first published: Monday, May 22, 2000, 5:30 [IST]