ஆகஸ்டுக்குப் பிறகு இந்திய அணியில் ஸ்ரீநாத் தேர்வு செய்யப்படுவார் - லேலே
புனே:
ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு நடைபெறும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீநாத்பரிசீலிக்கப்படுவார் என்று இந்திய கிரிக்கெட கட்டுபபாட்டு வாரியத்தின் செயலர் ஜெயந்த் லேலே தெரிவித்தார்.
இந்த மாதம் டாக்காவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி திங்கள்கிழமைஅறிவிக்கப்பட்டது. அதில், ஸ்ரீநாத்தின் பெயர் இல்லை. இது குறித்து இந்திய அணியை அறிவித்த லேலேயிடம்நிருபர்கள் கேட்டனர்.
தனக்கு 2 மாதம் ஓய்வு தரவேண்டும் என்று ஸ்ரீநாத் கடிதம் எழுதிக் கேட்டிருந்தார். அதனால், அவர் பெயரைஆசியக் கோப்பைக்குப் பரிசீலிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஸ்ரீநாத் ஓய்வுபெற்றுவிட்டதாக யாரும்கருதவேண்டாம்.
ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு ஸ்ரீநாத்தின் பெயர்பரிசீலிக்கப்படும் என்றார் லேலே.
மார்ச் மாதம் ஷார்ஜாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிறகு இந்தியா திரும்பிய ஸ்ரீநாத்,தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதனால் ஒரு நாள் போட்டிகளுக்கு எனதுபெயரைப் பரிசீலிக்கவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாக கபில் தேவ் தெரிவித்தார்.
யு.என்.ஐ.