தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கால்வாயில் பஸ் கவிழ்ந்து 16 பேர் சாவு - 38 பேர் காயம்
மும்பை:
சாலையோரக் கால்வாயில் தனியார் பஸ் கவிழ்ந்து 16 பேர் இறந்தனர். 38 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இவ் விபத்துநடந்தது.
பஸ்ஸில் 65 பேர் பயணம் செய்தனர். கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸில் டயர் திடீரென்று வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்,அருகில் இருந்த சாலையோர கால்வாயில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திலேயே பலர் இறந்தனர்.
காயமடைந்தவர்கள் மருததுவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள்சென்று விசாரணை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications