தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
தமிழர்களின் "ரத்தம் உறிஞ்சும் சிங்கள ராணுவம்

மதுரை:

யாழ்ப்-பா--ணத்-தி-லி-ருந்-து அ-க-தி-க-ளா-க தப்-பி வ-ரும் தமி-ழர்-க-ளை --இ-லங்-கை ரா-ணு-வம் மிரட்-டி அவர்-க-ளி-ட-மி-ருந்-து கட்-டா-ய-மா-கரத்-தம் எ-டுப்-ப-தா-க தமி-ழ-கத்-திற்-கு வந்-த அக-தி-கள் கூ-றி-யுள்-ள-னர்.

இலங்கையில் யாழ்ப்பாணம் நகரை கைப்பற்ற உச்சகட்ட போர் நடைபெற்று வருகிறது. ராணுவம், வி-டு-த-லைப் புலிகள் - இருதரப்பிலும் பலர்கொல்லப்பட,பலர் காயமுற்றுள்ளனர். காயமுற்றோருக்கு தேவைப்படும் ஏராளமான ரத்தத்தை இ-லங்-கை அரசு செஞ்சிலுவைச் சங்கத்திடம் பெறுகிறது.அப்படியும் ரத்தப்பற்றாக்குறை நில-வு-கி-ற-து.

போர்ச் சூழ்நிலையைக் கண்டு அஞ்சி தமிழகத்திற்கு குடும்பத்துடன் கூட்டமாக தப்பி வரும் தமிழர்களை, சிங்கள ராணுவம் வலுக்கட்டாயமாக மிரட்டி இலங்கைராணுவத்தின் மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்கின்றனர். பிடிபட்ட தமிழர்களும் வேறு வழியில்லாமல் ரத்தத்தை கொடுத்து வருகிறார்கள்.

வலுக்கட்டாயமாக ரத்தம் உறிஞ்சப்பட்டதில் இரண்டு பேர் இறந்து விட்டதாக அகதியாக தப்பி தமிழகம் வந்த நர்ஸ் ஒருவர் தெரிவித்தார். செஞ்சிலுவைச்சங்கத்தினர் இந்த பிரச்சனையில் தலையிட்டு ராணுவத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழகம் வந்துள்ள அகதிகள் கோருகின்றனர்.

யாழ்ப்பாணம், தலைமன்னார் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டஅகதிகள் தமிழகத்திற்கு தப்பி வர காத்திருக்கிறார்கள். இலங்கை ராணுவமோ ,கடற்படையோ எந்நேரத்திலும் அவர்களை வளைத்து ராணுவ மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்படலாம் என்கிறார்கள் அகதிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+