தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள நார்வே நாட்டுத் தூதரகம் மீது புதன்கிழமை இரவு ராக்கெட் குண்டுவீசப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், திடீரென்று தூதரகக் கட்டடம் மீது குண்டு வீசிவிட்டுத் தப்பிவிட்டனர். ஆனால்,குண்டு இலக்குத் தவறி, அருகில் உள்ள கட்டடச் சுவர் மீது விழுந்து வெடித்தது. இதனால், தூதரகக் கட்டடத்துக்குஎந்த சேதமும் ஏற்படவில்லை. கட்டடத்துக்குள் இருந்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டைநடந்து வருகிறது. இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வழி வகை காணும் பணியில் நார்வே நாடுஈடுபட்டுள்ளது. அதற்காக, அந் நாட்டைச் சேர்ந்த உயர் மட்டக் குழு இலங்கை வந்துள்ளது.
இலங்கைப் பிரச்சினையில் நார்வே நாடு தலையிடுவதை விரும்பாதவர்கள்தான் இத் தாக்குதலைநடத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications