Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலைகளில்லா மரத்தில்

இறங்கியது காகம்

இலையுதிரில் சாயும் இரவு

இந்த ஹைகூ கவிதை அற்புதமான படிமங்களை

உள்ளடக்கியது.

இலைகளில்லா மரம்-

காகம்-

இரவு-

-----------------------------------------------------

இந்த மூன்-றுமே கவிதைகளால் சிலாகிக்கப்படுகிறது இல்லை-

இவற்றை நேர் எதிர் படிமங்களாய்

இந்தக் கவிதை தூக்கிப் பிடித்திருக்கிறது-

--------------------------------------------------

காகம்.......

புறாவும் காகமும் இருத்தலின் இரண்டு பக்கங்கள்-

இரவு........

இரவும் பகலும் நாளின் இரண்டு பகுதிகள்

இலையுதிர்........

இலையுதிரும் வசந்தமும் பருவங்களின் இரண்டு பரிமாணங்கள்

காகத்திற்கும் தாழ்வு மனப்பான்மை

அதன் கருமை நிறத்தால் ஏற்படவில்லை-

அதிக எண்ணிக்கை இருப்பதாலும்,

அதிக ஆண்டுகள் வாழ்வதாலும்

காகங்கள் மனிதர்களுக்கு இளக்காரமாயின.

ஒருவேளை எண்ணிக்கையில் குறைந்திருந்தால்

மலர்களைப் போல உதிரத் தெரிந்திருந்தால்

அவையும் அபூர்வமாயிருக்கும்,

தாழ்வு மனப்பான்மை அடிக்கடி அலங்கரிக்கத் துணிவதுபோல்

அதீத எச்சரிக்கையுடன் இருக்கவும் - செய்கிறது.

அதனால்தான் அவை யாரையும் நம்புவதில்லை.

அதிகமாயிருப்பது எதுவுமே சலித்துப் போகிறது-

எப்போதாவது தட்டுப்படுவது

மனிதனின் மனத்தை ஈர்க்கிறது-

நாம் காகங்கவைப் பறவையாகவே கருதுவதில்லை-

புறாவை, கொக்குகளை, கிளிகளை நாம்

பறவைகளாக உருவகப்படுத்திய அளவுக்கு காகத்தைச் செய்யவில்லை-

யாரேனும் வீட்டில் காகத்தை வளர்ப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?

------------------------------------------------

இரவு - ஆழமானது, வெளிச்சத்திலும் விசாலமானது.

இரவு ஏற்றத்தாழ்வுகளைப் போக்குகிறது-

இரவு- நிறங்களை வெல்லுகிறது-

வளர்ச்சிக்கு வழி விடுகிறது.

இரவு- புலன்களைத் தீவிரப்படுத்துகிறது.

----------------------------------------------

இரவு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது-

இரவு சமத்தன்மையை அளிக்கிறது.

உழைக்கிற தோள்களுக்கு ஓய்வு தருகிறது-

இரவு இல்லாமலிருந்தால்

வெளிச்சம் நிச்சயம் சபிக்கப்பட்டிருக்கும்.

------------------------------------------------

தீவுகள் பூமியை சொந்தம் கொண்டாடலாம்-

வானத்தை எப்படி முடியும்?

வானமும், நிலவும், ஞாயிறும், நட்சத்திரங்களும், காற்றும்

எல்லோருக்கும் பொதுவானவை-

சிறகுகளை விரித்தும் பறவைகளுக்கு பூமி முழுமையுமே

கணக்கற்ற கூடுகளின் கைகுலுக்கும் மஞ்சம்

இலையுதிர் - மரம் ஓய்வெடுக்கும் பருவம்

மரம் தியானிக்கும் நேரம்.

------------------------------------------------------

இரவையும் கவிதைகள் பாராட்டுவதில்லை-

இலையுதிரையும் கவிஞர்கள் பாடியதில்லை.

இலைகளில்லாத இலையுதிரும் இரவும் போன்றே:

எல்லா மரங்களிலும் ஓர் சமத்தன்மையை உண்டாக்குகின்றன.

இலையுதிர் காலத்தில்

இலைகளில்லாத மரத்தில்

எந்தப் பறவை வந்து அமரும்?

--------------------------------------------------

இலையுதிர் வசந்தத்தைப் பிரசவிக்கும் கர்ப்ப காலம்-

தேவையில்லாதது தேவையானதற்குத் தேவையாயிருக்கிறது-

பழத்தில் தோல் சதைப்பகுதியை பழுதுபடாமல் காப்பாற்றுவது போல்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+