தமிழகத்தில் இன்று
இலைகளில்லா மரத்தில்
இறங்கியது காகம்
இலையுதிரில் சாயும் இரவு
இந்த ஹைகூ கவிதை அற்புதமான படிமங்களை
உள்ளடக்கியது.
இலைகளில்லா மரம்-
காகம்-
இரவு-
-----------------------------------------------------
இந்த மூன்-றுமே கவிதைகளால் சிலாகிக்கப்படுகிறது இல்லை-
இவற்றை நேர் எதிர் படிமங்களாய்
இந்தக் கவிதை தூக்கிப் பிடித்திருக்கிறது-
--------------------------------------------------
காகம்.......
புறாவும் காகமும் இருத்தலின் இரண்டு பக்கங்கள்-
இரவு........
இரவும் பகலும் நாளின் இரண்டு பகுதிகள்
இலையுதிர்........
இலையுதிரும் வசந்தமும் பருவங்களின் இரண்டு பரிமாணங்கள்
காகத்திற்கும் தாழ்வு மனப்பான்மை
அதன் கருமை நிறத்தால் ஏற்படவில்லை-
அதிக எண்ணிக்கை இருப்பதாலும்,
அதிக ஆண்டுகள் வாழ்வதாலும்
காகங்கள் மனிதர்களுக்கு இளக்காரமாயின.
ஒருவேளை எண்ணிக்கையில் குறைந்திருந்தால்
மலர்களைப் போல உதிரத் தெரிந்திருந்தால்
அவையும் அபூர்வமாயிருக்கும்,
தாழ்வு மனப்பான்மை அடிக்கடி அலங்கரிக்கத் துணிவதுபோல்
அதீத எச்சரிக்கையுடன் இருக்கவும் - செய்கிறது.
அதனால்தான் அவை யாரையும் நம்புவதில்லை.
அதிகமாயிருப்பது எதுவுமே சலித்துப் போகிறது-
எப்போதாவது தட்டுப்படுவது
மனிதனின் மனத்தை ஈர்க்கிறது-
நாம் காகங்கவைப் பறவையாகவே கருதுவதில்லை-
புறாவை, கொக்குகளை, கிளிகளை நாம்
பறவைகளாக உருவகப்படுத்திய அளவுக்கு காகத்தைச் செய்யவில்லை-
யாரேனும் வீட்டில் காகத்தை வளர்ப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?
------------------------------------------------
இரவு - ஆழமானது, வெளிச்சத்திலும் விசாலமானது.
இரவு ஏற்றத்தாழ்வுகளைப் போக்குகிறது-
இரவு- நிறங்களை வெல்லுகிறது-
வளர்ச்சிக்கு வழி விடுகிறது.
இரவு- புலன்களைத் தீவிரப்படுத்துகிறது.
----------------------------------------------
இரவு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது-
இரவு சமத்தன்மையை அளிக்கிறது.
உழைக்கிற தோள்களுக்கு ஓய்வு தருகிறது-
இரவு இல்லாமலிருந்தால்
வெளிச்சம் நிச்சயம் சபிக்கப்பட்டிருக்கும்.
------------------------------------------------
தீவுகள் பூமியை சொந்தம் கொண்டாடலாம்-
வானத்தை எப்படி முடியும்?
வானமும், நிலவும், ஞாயிறும், நட்சத்திரங்களும், காற்றும்
எல்லோருக்கும் பொதுவானவை-
சிறகுகளை விரித்தும் பறவைகளுக்கு பூமி முழுமையுமே
கணக்கற்ற கூடுகளின் கைகுலுக்கும் மஞ்சம்
இலையுதிர் - மரம் ஓய்வெடுக்கும் பருவம்
மரம் தியானிக்கும் நேரம்.
------------------------------------------------------
இரவையும் கவிதைகள் பாராட்டுவதில்லை-
இலையுதிரையும் கவிஞர்கள் பாடியதில்லை.
இலைகளில்லாத இலையுதிரும் இரவும் போன்றே:
எல்லா மரங்களிலும் ஓர் சமத்தன்மையை உண்டாக்குகின்றன.
இலையுதிர் காலத்தில்
இலைகளில்லாத மரத்தில்
எந்தப் பறவை வந்து அமரும்?
--------------------------------------------------
இலையுதிர் வசந்தத்தைப் பிரசவிக்கும் கர்ப்ப காலம்-
தேவையில்லாதது தேவையானதற்குத் தேவையாயிருக்கிறது-
பழத்தில் தோல் சதைப்பகுதியை பழுதுபடாமல் காப்பாற்றுவது போல்
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications